என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
    X

    13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

    • மகளிர் போலீசில் புகார்
    • வேலூர் சிறையில் அடைத்தனர்

    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.

    காட்பாடி அடுத்த சேவூர் சத்தியபுரத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 19) சிறுமி தனியாக இருப்பதை அறிந்தார்.

    சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது தனியாக இருந்த சிறுமியை கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். சிறுமி கத்தி கூச்சலிட்டார்.

    இதனால் பயந்து போன சிவகுமார் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து சிறுமியின் தாய் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிவகுமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×