search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை பரிசோதனை செய்ய முயன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை பரிசோதனை செய்ய முயன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

    • அக்கம் பக்கத்தினர் அந்த மர்மநபரை பிடித்தனர் குடியாத்தம் டவுன் போலீசில் அவரை ஒப்படைத்தனர்
    • குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி இரவு பிரசவ வார்டுக்குள் அத்துமீறி மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார்.

    அவர் கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்ய முயன்றுள்ளார் அப்போது அந்த கர்ப்பிணி பெண் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அந்த மர்மநபரை பிடித்தனர் குடியாத்தம் டவுன் போலீசில் அவரை ஒப்படைத்தனர்.

    அவர் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த சுகுமார் (வயது 30) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பிரசவ வார்டுக்குள் அத்துமீறி நுழைந்து கர்ப்பிணிப் பெண்ணை பரிசோதனை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏ ற்படுத்தியது.

    இந்த வழக்கில் ெஜயிலில் உள்ள சுகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார் கலெக்டர் நேற்று சுகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    Next Story
    ×