என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபர் கைது
    X

    வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபர் கைது

    • 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் அபேஸ்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அன்பூண் டியை சேர்ந்தவர் லதா. இவர் கடந்த மே மாதம் குடும்பத் தினருடன் வெளியே சென்றிருந்தபோது மர்மநபர்கள் வீட் டின் கதவை உடைத்து 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை திருடினர். லதா குடும்பத்தினர் திடீரென வீடு திரும்பியa தால் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வீட்டின் அருகே விட்டு விட்டு தப்பி யோடினார்கள்.

    இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து மோட்டார் சைக்கிள் பதி வெண் மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.

    அதில், கள்ளக்குறிச்சி மாவட் டம் சின்னசேலம் தாலுகா செஞ்செட்டிநத்தல் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 24) நகை, பணம் திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். வெங்கடேசனி டம் இருந்து 14 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×