search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே  காடாம்புலியூரில் வாகன சோதனை சாவடி
    X

    காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.

    பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் வாகன சோதனை சாவடி

    • பண்ருட்டி போலீஸ் சரகத்தில் அடிக்கடி வாகன விபத்து பெருமளவில் நடக்கிறது.
    • தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன சோதனை மேற்கொள்வதென போலீசார் முடிவு செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி போலீஸ் சரகத்தில் அடிக்கடி வாகன விபத்து பெருமளவில் நடக்கிறது. இதனை தொடர்ந்து கடலூர் போலீஸ் சூப்பிரண்டு, பண்ருட்டி துணை சூப்பிரண்டு ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம், புதுப்பேட்டை, கொள்ளுகாரன் குட்டை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன சோதனை மேற்கொள்வதென போலீசார் முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து பண்ருட்டி சென்னை சாலை கொள்ளு காரன் குட்டை பகுதியில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டு நேற்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.

    Next Story
    ×