search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
    X

    சித்திரை திருவிழா தேரோட்டத்தினை கலெக்டர் ஷஜீவனா வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

    • விழாவில் முக்கிய நிகழ்ச்சி யான திருத்தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
    • தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வீர பாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் முக்கிய திருவிழாவாக ஆண்டுதோறும் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இத்திரு விழாவில் முக்கிய நிகழ்ச்சி யான திருத்தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    திருவிழாவில் சிறப்பு பஸ்கள் உள்பட ஏராளமான வசதிகளை அரசு செய்துள்ளது. மேலும் வருகிற 16-ந்தேதி வரை பக்தர்கள் அம்மனை தரிசித்துவிட்டு செல்லும் வரை போலீசார் நியமிக்க ப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவிலுக்குள் சென்று வர தனித்தனி வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கண்களுக்கு புலப்படும் வகையில் அறிவிப்பு பலகைகளும், ஒலிபெருக்கி யின் மூலமும் பக்தர்களுக்கு தேவையான அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வீர பாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    தேரோட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம்பி டித்து இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய்பாபு, எஸ்.பி பிரவீன்உமேஷ்ேடாங்கரே, வருவாய் அலுவலர் ஜெய பாரதி, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×