என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா வருசாபிஷேகத்துடன் தொடங்கியது- இன்று இரவு திருவிளக்கு பூஜை
- நாளை காலை பால்குடம் எடுத்து பவனிவருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- 3-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடைவிழா வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த வருட திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வருசாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அன்னதானமும் வழங்கப்பட்டடது. இரவு 7 மணிக்கு உடன்குடி வட்டாரப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி, வறட்சி நீங்கி பசுமை வேண்டி பெண்கள் பாடல்கள் பாடி வழிபாடு செய்யும் திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு இளையபெருமாள் பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.
நாளை மே (1-ந்தேதி) காலை 8 மணிக்கு மேளதாளம், வாண வேடிக்கையுடன் பால்குடம் எடுத்துபவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபராதனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது. 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி இரவு 7 மணிக்கு வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் வீதிஉலா வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சந்தன மாரியம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குதல் நடக்கிறது.
3-ந் தேதி (புதன்கிழமை) நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, அம்மன் மஞ்சள் நீராடுதல், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சப்பரத்தில் பவனிவருதல், 4-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அக்கினி குண்டத்தில் பக்தர்கள் இறங்குதல், இரவு 8 மணிக்கு கேரளா புகழ் கலக்கல் கண்ணன் குழுவினரின் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.
5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சங்கடக்கார சுவாமி கோவிலில் காலை 8 மணிக்கு வருசாபி ஷேகம், பகல் 12 மணிக்கு அலங்காரம் தீபாராதனை, இரவு 12 மணிக்கு சிறப்பு படையல் பூஜை, மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்