search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி அருகே கன்னி விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா
    X

    கன்னி விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்ற போது எடுத்த படம்.




    கோவில்பட்டி அருகே கன்னி விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா

    • கன்னி விநாயகர், கல்யாண சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை தேவஸ்தான கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    • 7 கிலோ வெள்ளி முழு கவசத்தினை சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவில் கமிட்டியினரிடம் வழங்கினர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த கன்னி விநாயகர், கல்யாண சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை தேவஸ்தான கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு கன்னி விநாயகருக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் 7 கிலோ வெள்ளி முழு கவசத்தினை கோவில்பட்டி மத்திய பகுதி ம.தி.மு.க. ஒன்றிய செயலா ளரும், கோவில்பட்டி நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவருமான சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவில் கமிட்டியினரிடம் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் மணிமாலா சின்னத்துரை, பஞ்சாயத்து தலைவர் சுந்தரி காளியப்பன், துணைத் தலைவர் பாண்டி முனியம்மாள், குமரன், கார்த்தி, மாரியப்பன், ரமேஷ், கமல், பரமகுரு, பொன் ரவி, மற்றும் ேகாவில் கமிட்டி நிர்வாகத்தினர், சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×