search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகாசி விசாகத்தையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்
    X

    பழனி மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக காத்திருந்தனர்.

    வைகாசி விசாகத்தையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்

    • மலைக்கோவிலில் தரிசன வழிகள், வெளி ப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • வைகாசி விசாகத்தை யொட்டி பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா காலங்களில் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

    இன்று வாரவிடுமுறை என்பதாலும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக மலைக்கோவிலில் தரிசன வழிகள், வெளி ப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின்இழுவை ரெயில்நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    அங்கும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அலாதிய கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் சாமி தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

    இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. வைகாசி விசாகத்தை யொட்டி இனிவரும் காலங்களில் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×