search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டிக்கு வந்த மத்திய மந்திரி எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு
    X

    ஊட்டிக்கு வந்த மத்திய மந்திரி எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு

    • பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கு பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • வெறி நாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஊட்டி

    மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக ஊட்டிக்கு வந்தார்.

    இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதிக்கு வந்தார்.

    அங்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதன் பின்னர் அவர் கோழிப்பண்ணை பகுதியில் உள்ள வெறி நாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதையடுத்து ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினார். இன்று ஒக்கிலியர் திருமண மண்டபத்தில் பா.ஜனதா சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எல்.முருகன் பங்கேற்றார். அப்போது எதிர்வரும் லோக்சபா தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகள் எடுத்து கூறப்பட்டது.

    அதன்பின்னர் தொழில் அதிபர்கள், சமுதாய தலைவர்களை சந்தித்து பேசினார். இதில் மாநில, மாவட்ட அணி மற்றும் மண்டல நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து ஊட்டி தமிழகம் மாளிகையில் நடக்கும் கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

    Next Story
    ×