என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
- ஆகாசை வழிமறித்து தாக்கி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.
- மப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் மந்தவெளியம்மன் அம்மன் நகர், பேட்டை தெருவை சேர்ந்தவர் ஆகாஷ். இவர், பேரம்பாக்கம் பஜாரில் உள்ள ஓட்டலுக்கு டிபன் வாங்க சென்றார். அப்போது அங்கு இருந்த திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்த அபிமன்யு காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அரிகிருஷ்ணன் மற்றும் வினோத்குமார் ஆகிய 3 பேரும் ஆகாசை வழிமறித்து தாக்கி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் மப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து அபிமன்யு, அரிகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தார். மேலும் தப்பி ஓடிய வினோத்குமாரை தேடி வருகிறார்கள்.
Next Story






