search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜனதா நிர்வாகியை வீடு புகுந்து தாக்க முயற்சி- 2 பேர் கைது
    X

    பா.ஜனதா நிர்வாகியை வீடு புகுந்து தாக்க முயற்சி- 2 பேர் கைது

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்தும், ரஞ்சித்தும் சேர்ந்து புதிதாக இறைச்சி கடை தொடங்கி உள்ளார்கள்.
    • பரந்தாமன் ஆலந்தூர் போலீசில் புகார் செய்து உள்ளார்.

    சென்னை:

    ஆலந்தூர் லஸ்கர் தெருவை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 40). பா.ஜனதா பட்டியல் அணி மாநிலச் செயலாளராக இருக்கிறார். அந்த பகுதியில் பல வருடங்களாக இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்தும், ரஞ்சித்தும் சேர்ந்து புதிதாக இறைச்சி கடை தொடங்கி உள்ளார்கள். அந்த கடையில் சரியாக வியாபாரம் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் நள்ளிரவில் பரந்தாமனின் வீடு புகுந்து அவரை தாக்க முயன்று உள்ளார்கள்.

    இதுபற்றி பரந்தாமன் ஆலந்தூர் போலீசில் புகார் செய்து உள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்கள் வீடு புகுந்த கேமரா ஆதாரங்களையும் கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×