search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் காசநோய் கண்டறியும் வாகனம்: கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
    X

    கள்ளக்குறிச்சியில் காசநோய் கண்டறியும் வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சியில் காசநோய் கண்டறியும் வாகனம்: கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

    • கள்ளக்குறிச்சியில் காசநோய் கண்டறியும் வாகனம் கலெக்டர் ஸ்ரீதர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்கு டியினர் பிரி வினருக்கு 60 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் 2025-ல் காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை அடையும் வகையில் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ரே பொருத்திய நவீன மருத்துவ வாகனத்தினை சென்னை யில்தமிழகமுதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வழங்கப் பட்ட காசநோய் கண்டறியும் நடமாடும் வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த காசநோய் கண்டறியும் வாகனம், மருத்துவ குழுவினருடன் கிராமங்கள் முழுவதும் சென்று காசநோய் கண்டறிதல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட் டவர்கள், வயதான வர்கள், புகைப்பிடிப்பவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ள வர்கள், சிறுநீரகம் தொடர்பான நோய் உடைய வர்கள், புற்று நோயால் பாதிக்க ப்பட்ட வர்களுக்கு எக்ஸ்ரே பரி சோதனை மேற் கொள்ளப்படும். இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட த்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார்.

    இந்நிகழ்வின்போது, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பாலச்சந்தர், துணை இயக்குநர் (காசநோய்) சுதாகர், துணை இயக்குநர் பொது சுகாதாரம் ராஜா, நெஞ்சக நோய் நிபுணர் ராம்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் நேரு, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் பழமலை, உதவி மருத்துவ அலு வலர் பொய்யாமொழி, தேசிய சுகாதார குழுமத்தின் மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பிரதம மந்திரி மத்திய மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகவும், சில்லரை மீன் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டும் ரூ.69,243 மதிப்பீட்டிலான இருசக்கர வாகனத்தினையும், ரூ.4,478 மதிப்பீட்டிலான 70 லிட்டர் கொள்ளளவு உள்ளகுளிர்காப்பு பெட்டியினையும், பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியத்திலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்கு டியினர் பிரி வினருக்கு 60 சதவீத மானிய த்திலும் வழங்கப் படுகிறது.

    அதன்படி, இன்று சங்கராபுரம் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர் களில் பொதுப்பிரிவு வகுப்பைச் சேர்ந்த 12 பயனாளிகளுக்கு தலா ரூ.73,721 மதிப்பிலான குளி ர்காப்பு பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தினை 40 சதவீத மானியத்துடன் ரூ.44,233 மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது, உதவி இயக்கு நர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) நித்ய பிரியதர்ஷினி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் சந்திரமணி மற்றும் அரசு அலு வலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×