என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
லாரி உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம்
- அரசு விதிமுறைப்படி ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- அரசு அறிவித்த யூனிட் அளவில் மட்டுமே அனைத்து லாரிகளுக்கும் மணல் நிரப்ப வேண்டும்.
சீர்காழி:
சீர்காழியை அடுத்த குன்னம் மற்றும் பாலுரான் படுகையில் அரசு மணல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இங்கு அரசு விதிமுறைப்படி ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் பதிவு செய்த லாரிகளுக்கு சீர்காழி புறவழிச்சாலை துறையூர் செல்லும் பகுதியில் டோக்கன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஆன்லைன் பதிவு மூலம் குறைந்த லாரிகளுக்கு மணல் அல்ல டோக்கன் வழங்கப்படுவதாகவும் மீதமுள்ள லாரிகளுக்கு ஆப்லைன் முறையில் மணல் அள்ள அனுமதிக்க படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டி வந்த நிலையில் ஆப் லைன் முறையில் மணல் அள்ள வெளி மாவட்ட லாரிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்தனர்.
இதனால் சீர்காழி, மயிலாடுதுறை, வல்லம்ப–டுகை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அங்கு அதிகாரி–களிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது வெளி மாவட்ட லாரி ஓட்டுநர்கள் மற்றும் உள்ளூர் லாரி ஓட்டுனர்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அதன் பிறகு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசு அறிவித்தபடி ஆன்லைனில் புக்கிங் செய்து மணல் அள்ள அனுமதிக்க வேண்டும், அரசு அறிவித்த யூனிட் அளவில் மட்டுமே அனைத்து லாரிகளுக்கும் மணல் நிரப்ப வேண்டும் என சுமார் 50 -க்கும் மேற்பட்ட லாரிகளை டோக்கன் வழங்கும் இடத்திற்கு முன்பாக குறுக்கே நிறுத்தி திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் உள்ளே டோக்கன் பெற்ற 70-க்கும் மேற்பட்ட வெளிமாவட்ட லாரிகள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தன. இதனால் ஆத்திரமடைந்து கிராம மக்களும் அப்பகுதியில் லாரி ஓட்டுநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இந்த இரு தரப்பு திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனை அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சீர்காழி வருவாய்த் துறையினரும் உரிமையாளர்கள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சுமார் 3 மணிநேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்