என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டிவனம் அருகே உப்பு மூட்டைகளை ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்
- இந்த லாரியை அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.
- நீதிமன்றம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.
விழுப்புரம்:
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேற்றிரவு லாரி புறப்பட்டது. இந்த லாரியை அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி லாரியின் கிளினராக உள்ளார். இந்த லாரி, திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் உள்ள நீதிமன்றம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த உப்பு மூட்டைகள் சாலையில் சரிந்தன.
லாரி டிரைவர், கிளினர் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் இவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்தவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். இது குறித்து லாரி உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த விபத்தினால் திண்டிவனம் - சென்னை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்