என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் தூய்மை பணி
- காலை 10 மணிக்கு முதல் பகல் 2 மணி வரை திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது
- துணை கமிஷனர் ஹரி சிங் நயால் முன்னிலையில் பங்கு பெற்றனர்
கே.கே.நகர்,
மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ள பாரத பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நேற்று திருச்சி விமான நிலையத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையின் துணை கமிஷனர் ஹரி சிங் நயால் முன்னிலையில் பங்கு பெற்றனர். இதில் விமான நிலைய ஆணையக் குழு அதிகாரிகளும் ஊழியர்களும் பொதுமக்களுடன் இணைந்து தூய்மை பணி செய்தனர். தூய்மை பணி காலை 10 மணிக்கு முதல் பகல் 2 மணி வரை திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. திருச்சி விமான நிலையத்தின் துணை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சிவகுமார் சந்தானகிருஷ்ணன் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Next Story






