search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட மாநில வாலிபர் இரும்பு கம்பியால் அடித்து கொலை
    X

    வட மாநில வாலிபர் இரும்பு கம்பியால் அடித்து கொலை

    • துறையூர் அருகே கோஷ்டி மோதல் வாலிபர் இரும்பு கம்பியால் அடித்து கொலை
    • கொலை ெசய்யப்பட்ட தர்மேந்தர் சர்மா மற்றும் கொலையாளிகள் இருவரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள்

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது57).

    இவர் மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் கோவை மாவட்டம் சூலூரில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இவரது வீட்டின் உட்புறத்தை அழகு படுத்துவதற்காக நாமக்கல்லை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை அணுகி உள்ளார்.

    அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தர்மேந்தர் சர்மா (31), சோட்டு (28), சச்சின் (28) ஆகிய 3 பணியாளர்களை கண்ணையன் வீட்டிற்கு பணிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த மூன்று ேபரும் கண்ணையன் வீட்டின் கீழ் புறத்தில் ஒரு அறையில் தங்கி பணி செய்துள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் சோட்டு, சச்சின் ஆத்திரமடைந்து தர்மேந்தர் சர்மாவை இரும்பு கம்பியால் தாக்கினர்.

    இதனை பார்த்த கண்ணையன் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டு உள்ளார்.

    இதையடுத்து சோட்டு, சச்சின் கண்ணையனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    பின்னர் மயக்க நிலையில் இருந்த தர்மேந்திர ஷர்மாவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக கண்ணையன் அளித்த புகாரின் பேரில் சோட்டு, சச்சின் ஆகிய இருவர் மீதும் துறையூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திர ஷர்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்கினை கொலை வழக்காக மாற்றம் செய்த துறையூர் போலீசார், தப்பிச்சென்ற சோட்டு, சச்சின் ஆகிய இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    கொலை ெசய்யப்பட்ட தர்மேந்தர் சர்மா மற்றும் கொலையாளிகள் இருவரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆகவே கொலையாளிகள் அந்த மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

    துறையூரில் வடமாநில இளைஞர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில், வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×