என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி அரசு மருத்துவமனையில்நோயாளிடம் பணம் பறித்த கொள்ளையன் கைது
- வரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 500 பணத்தை திருடிக் கொண்டு ஓட முயன்றார்.
- உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
திருச்சி
கரூர் மாவட்டம் குளித்தலை சத்திரம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு (வயது 33). இவர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வெளி நோயாளிகள் வார்டு பகுதியில் அவர் சென்றபோது, மர்ம நபர் ஒருவர் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 500 பணத்தை திருடிக் கொண்டு ஓட முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதைன தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் கைதானவர் திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் ( 58 ) என்பது தெரியவந்தது
Next Story






