என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி அரசு மருத்துவமனையில் கலெக்டர்  திடீர் ஆய்வு
    X

    திருச்சி அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • திருச்சி அரசு மருத்துவமனையில் கலெக்டர் பிரதீப் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
    • 5 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அதிரடி ஆய்வு

    திருச்சி,

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில்திருச்சிமாவட்டத்தில் மூன்று பெண்கள் உட்பட 5 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..அனைவரும் நலமுடன் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் பிரதீப் குமார் திடீர் ஆய்வுமேற்கொண்டார்

    திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு வார்டு, ரத்தப்பரிசோதனை உபகரணங்கள், காய்ச்சல் வார்டுகளில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திடீர் ஆய்வு செய்தார்.அப்போதுகாய்ச்சலுக்கு உண்டான ஊசி, மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பில் உள்ளதா? எனவும் விசாரணை நடத்தினார்.ஆய்வின் போது மருத்துவமனை டீன் நேரு மற்றும் பலர் உடன் இருந்தனர்

    Next Story
    ×