search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநங்கை சாவு
    X

    திருநங்கை சாவு

    • திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மயங்கி விழுந்து திருநங்கை சாவு
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    திருச்சி,

    திருச்சி உறையூர் காவேரி நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பால நாகேந்திரன் என்கிற நர்மதா (வயது 27). திருநங்கையான இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து டாக்டர் பாபு ஆனந்த், அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது திருநங்கை தீராத வியாதியால் சிகிச்சை பெற்று வந்ததாகவும், வழக்கம்போல் சிகிச்சைக்கு வந்தவர் திடீரென இறந்து விட்டதும் தெரிய வந்தது.

    Next Story
    ×