search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்-பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்
    X

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்-பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்

    • திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டத்தால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது
    • போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா இன்று ெதாடங்கிவைத்தார்

    திருச்சி:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பெருநகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி கும்பகோணம் அரசு போக்கு–வரத்து கழகம் சார்பில் இன்று சென்னை, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு 350 சிறப்பு பஸ்களும் நாளைய தினம் 400 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக அதி–காரி தெரிவித்தார். நாளை முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற காரணத் தினால் இன்று மாலை முதல் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கூட்டம் அலை–மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் மக்கள் மாலை முதல் விடிய விடிய வருவார்கள். ஆகவே சிறப்பு பஸ்களும் விடிய, விடிய பயணிகள் வருகைக்கு ஏற்ப இயக்கப்படும் என போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் தெரி–வித்தார். நாளைய தினம் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருவார்கள் அவர்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் நெருக்கடி மற்றும் சிரமமின்றி சென்று வருவதற்கு வசதிக்காக திருச்சியில் 2 இடங்களில் அதாவது மன்னார்புரம், வில்லியம்ஸ் ரோடு சோனா மீனா தியேட்டர் அருகி–லும் தற்காலிக சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மன்னார்பு–ரத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பொங்கல் சிறப்பு பஸ்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய–பிரியா இன்று கொடி–யசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்க–ளிடம் கூறியதாவது:- மதுரை, புதுக்கோட்டை போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இது 17-ந்தேதி வரை செயல்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க–வும், பயணிகளின் வசதிக் கா–கவும், அவர்கள் மகிழ்ச்சி–யுடன் பொங்கலை கொண்டாடுவதற்காக தங்கள் ஊர்களுக்கு செல்ல–வும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஓட்டுனர்கள், நடத்து–னர்களுக்கு கூடுதல் பணி நிமித்தமாக மன அழுத்தம் ஏற்படலாம். அதே நேரத் தில் அவர்கள் ஓய்வும் எடுத்து பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க வேண்டும்.

    பயணிகளுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி–யுள்ளோம். பொங்கல் சிறப்பு பாது–காப்பு பணியில் கூடுத–லாக 1,500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் எங்களி–டம் உள்ளது. அந்த குறிப் பிட்ட இடங்களில் வாகன விபத்துக்கள் ஏற்படா–மல் தவிர்க்க அந்த இடங்களில் கூடுதல் பாது–காப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை–கள் செய்யப் பட்டுள்ளது. மேலும் வாகன போக்கு–வரத்தில் விதி மீறலில் ஈடுபடுகிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், காலை, மாலை வேளைக–ளில் நகரில் போக்கு–வரத்து நெரிசல் ஏற்படு–வது உண்மைதான். அதற்காக அருகில் உள்ள நடைபாலத்தை திறப்பது குறித்து கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி–னார்.


    Next Story
    ×