என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூடுதல் வட்டி கேட்டு பெண் உட்பட 2 பேருக்கு மிரட்டல்
- கூடுதல் வட்டி கேட்டு பெண் உட்பட 2 பேருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- வாழைப்பழம் விற்பனை செய்து வருகிறார்
திருச்சி:
திருச்சி உரையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஸி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உறையூரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரிடம் ரூ.70 ஆயிரம் பணம் கடனாகப் பெற்றார். பின்னர் அவர் 1 லட்சத்தி 50 ஆயிரம் வட்டியாக மட்டும் திருப்பிக் கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு துரைராஜ் கூடுதலாக வட்டி கேட்டு ரோஸியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து ரோஸி தில்லை நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் துரைராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் இவர் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் . இவர் கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி உள்ளார்.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு கூடுதல் வட்டி கேட்பதோடு அவரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டி உள்ளார். இதுகுறித்து சார்லஸ் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்