என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தந்தையை சரமாரியாக அரிவாளால் வெட்டிய மகன்
- உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
- சகோதரி குழந்தைகளின் காதணி விழா எதிர்ப்பை மீறி செல்ல முயன்றதால் வெறிச்செயல்
திருச்சி,
திருச்சியை அடுத்த திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள இனாம்குளத்தூர் காவல்காரர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 56). கோவில் பூசாரியான இவருக்கு பெரியண்ணன் (36) என்ற மகனும், சுமதி, லட்சுமி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்து வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியண்ணனுக்கும் அவரின் இரண்டு சகோதரிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சகோதரிகளுடன் அவர் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதற்கிடையே வீரப்பூரில் வசிக்கும் லட்சுமி தனது இரு குழந்தைகளுக்கு இன்று (புதன்கிழமை) காதணி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்பேரக் குழந்தைகளின் இந்த காதணி விழாவுக்கு வேலாயுதம் தனது மனைவியுடன் செல்ல தயாரானார். இதை அறிந்த பெரியண்ணன் தனது தந்தையிடம் காதணி விழாவுக்கு நீங்கள் செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மகனின் எதிர்ப்பை அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் குடிபோதையில் இருந்த பெரியண்ணன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வேலாயுதத்தின் முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் அவரது குடல் சரிந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பின்னர் பெரியண்ணன் அங்கிருந்து தப்பி ஓடினார். தாய் ராசம்மாள் மற்றும் உறவினர்கள் வேலாயுதத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இனாம்குளத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பெரிய ண்ணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்