என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
- திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
- அவரிடமிருந்து 1250 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
திருச்சி:
திருச்சி சிந்தாமணி காந்தி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 23).இவர் சிந்தாமணி வென்னிஸ் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டு இருப்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். பின்னர் அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ரவிச்சந்திரனை இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 1250 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
Next Story