search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து வீடுகளுக்கும் தனித்தனியாக கியூ ஆர் கோடு
    X

    அனைத்து வீடுகளுக்கும் தனித்தனியாக 'கியூ ஆர் கோடு'

    • திருச்சி மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க...
    • சோதனை ஓட்ட முயற்சி

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை கியூ ஆர் கோடு மூலம் இணைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனை மாநகராட்சியின் 61-வது வார்டில் சோதனை ஓட்டம் நடத்தி கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதனை முக்கியமாக திடக்கழிவு மேலாண்மைக்காக திட்டமிட்டுள்ளனர்இந்த அமைப்பின் கீழ், துப்புரவுத் தொழிலாளர்கள் ஒரு கட்டிடத்தில் ஒட்டப்பட் டிருக்கும் க்யூ ஆர் கோர்டை மொபைல் செயலியைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து, அங்கிருந்து சேகரிக்கப்ப–டும் குப்பைகள் பிரிக்கப் பட்டதா? இல்லையா என் பதை பதிவிடுவார்கள். இதன்மூலம் பொதுமக்கள் தங்களது கடமைகளை சரியாக செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க முடியும். இதுதொடர்பாக மாநக–ராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் கூறுகை–யில், திருச்சி மாநகராட்சி–யில் உள்ள 50 பொது கழிப்பிடங்களில் ஏற்க–னவே கியூ ஆர் கோடு பொருத் தப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,284 தரவுகள் பொது–மக்களிடமிருந்து வந்துள்ளது. இதில் சொற்ப புகார்கள் மட்டுமே உள்ளன. அதில் தண்ணீர் சரிவர வரவில்லை, கதவு உடைந்துள்ளது என்பன உள்ளிட்ட சில புகார்களை தெரிவித்திருந்தனர்.அதைத்தொடர்ந்து உடனே அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்துள் ளோம். மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு தனித்தனி கியூ ஆர் கோடு வழங்கும் திட்டம் இந்த ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த சோதனை ஓட்டத்தை திருச்சி மாநகராட்சியில் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு இருக்கின்றோம்.இந்த கியூ ஆர் கோடு மூலம் பொதுமக்கள் தங்களது வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி ஆகியவற்றை வீட்டில் இருந்தபடியே செலுத்த முடியும். அது மட்டுமல்லாமல் பாதாள சாக்கடை, கழிவு நீர் வாய்க் கால், குடிநீர் சப்ளை போன்றவற்றின் செயல்பாடுகளில் குறைகள் இருந்தால் அதனை மாநகராட்சிக்கு தெரிவித்து உடனடியாக நிவாரணம் தேடிக்கொள்ள முடியும். திடக்கழிவு மேலாண்மையையும் உறுதிப்படுத்த ஏதுவாக அமையும் என்றார்.கியூ ஆர் கோடு பொருத் தப்பட்டுள்ள வீடுகளில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து கொடுத்தார்களா? பொது–மக்கள் தரம் பிரித்து கொடுத்தார்களா? என்பதை கண்காணிக்க முடியும். மேலும் குடியிருப்பாளர்கள் தங்கள் குப்பைகளை எவ்வாறு அகற்றுகிறார்கள் என்பதை அறிந்து நடவ–டிக்கை மேற்கொள்ள உதவும் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

    Next Story
    ×