என் மலர்
உள்ளூர் செய்திகள்

எஸ்.ஆர்.எம்.யூ உறுப்பினர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு
- திருச்சி எஸ்.ஆர்.எம்.யூ உறுப்பினர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது
- எஸ்.ஆர்.எம்.யூ. மாநில துணைச் செயலாளர் வீரசேகரன் பார்வையிட்டார்
திருச்சி,
பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா வேண்டாமா என்பது குறித்து எஸ்.ஆர்.எம்.யூ உறுப்பினர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் 3 நாட்கள் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ் ஆர் எம் யூ ரெயில்வே தொழிற்சங்கத்தினர் வாக்களித்து வருகின்றனர். எஸ் ஆர் எம் யூ மாநில துணைச் செயலாளர் வீரசேகரன் பார்வையிட்டார்.
Next Story






