என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல் குவாரி வேலை நிறுத்த போராட்டம் நீடிப்பு
- கல் குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது
- அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தும் என்று குவாரி உரிமையாளர்கள் நம்பிக்கை
திருச்சி,
தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்னசாமி, திருச்சியில் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மேஜர் மினரலுக்கு உண்டான சட்ட திட்டங்களை மைனர் மினரல் என்றழைக்கப்படும், கல், ஜல்லி உடைக்கும்சிறு தொழில்களுக்கு அமுல்படுத்திய காரணத்தால் குவாரிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. குவாரிகளுக்கு கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படுகிறது.இதனால் சிறிய கல்குவாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்று எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது. சட்டவிரோதமாக கல்குவாரி செயல்பட்டால் அவர்களுக்கு எங்கள் ஆதரவு கிடையாது.தற்போது சில குவாரிகள் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி அபராத விதிக்கப்பட்டுள்ளது அந்த குவாரிகள் 20, 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. தற்போது திடீரென அபராதம் விதிப்பது எங்களை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.15 கோரிக்கைகளை வைத்துள்ளோம். பல கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார்.






