search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரதிருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
    X

    பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரதிருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    • பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கபட உள்ளன
    • பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17,18 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்து–கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    திருச்சி:

    தமிழ்நாடு அரசு போக்கு–வரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்.எஸ்.–ராஜ் மோகன் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி–ருப்பதாவது:- தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட். பொது–மக்கள் எளி–தாக, எவ்வித சிரமமும், இடை–யூறும் இன்றி, பயணம் செய்ய ஏது–வாக சிறப்பு பேருந்து–களை இயக்குகிறது.

    அதன்படி சென்னையிலி–ருந்து கும்பகோணம், தஞ்சா–வூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங் கண்ணி, மயிலாடு–துறை, திருவாரூர், திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கும் 12.01.2023, 13.01.2023 மற்றும் 14.01.2023 ஆகிய நாட்களிலும் மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை ஆகிய ஊர்க–ளுக்கும் மற்றும் கும்பகோ–ணம் போக்குவரத்துக்கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 12.01.2023 முதல் 14.01.2023 வரை–யும், அனைத்து முக்கிய நகரங்க–ளிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 12.01.2023 முதல் 14.01.2023 வரை சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொது–மக்கள் எளிதாக பய–ணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சா–வூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும், கரூர், திருச்சி, அரிய–லூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத் துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலை–வர் டாக்டர்.எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.

    மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16.01.2023, 17.01.2023 மற்றும் 18.01.2023 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்து–கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ப–தையும் மகிழ்வுடன் தெரி–வித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.


    Next Story
    ×