என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாக்கடையில் விழுந்து பெயிண்டர் சாவு
    X

    சாக்கடையில் விழுந்து பெயிண்டர் சாவு

    • சாக்கடையில் விழுந்து பெயிண்டர் உயிரிழந்தார்
    • தனியாக வசித்து வந்தார்

    திருச்சி:

    திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி குரூஸ் (வயது 57).பெயிண்டர்.

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மனைவியிடம் தகராறில் ஈடுப்பட்டு தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் அருகில் உள்ள சாக்கடையில் விழுந்து இறந்து கிடந்தார். தகவல் அறிந்து பாலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×