என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பச்சைமலை கிராம மக்களின் வீட்டு மனையை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சி
- தாசில்தாரிடம் மலைவாழ் மக்கள் புகார் அளித்துள்ளனர்
- தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சைமலை தென்புறநாடு ஊராட்சிக்குட்பட்ட கம்பூர் கிராமத்தில் கடந்த 100 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் மலைவாழ் கிராம மக்கள், தாங்கள் வசிக்கும் வீட்டுமனைப் பகுதிகளை தனி நபர் ஒருவர் சொந்தம் கொண்டாடுவதாகவும் , பழைய வீட்டினை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவதை தடுத்து நிறுத்துவதாகவும், அப்பகுதியில் சாலை வசதியினை தடுப்பதாகவும் துறையூர் தாசில்தார் புஷ்பராணியிடம் புகார் மனு அளித்தனர்.
வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலையில் தாங்கள் இருப்பதாகவும், சுமார் 20 வீடுகளுக்கு பத்திரபதிவு , மனைப்பட்டா, வீட்டுவரி ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் இருந்தும் தனிநபரின் ஆக்கிரமிப்பு தங்களை அச்சுறுத்துவதாகவும் உள்ளதால், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் பச்சைமலை கம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்