என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட மாநில வாலிபர் மர்ம சாவு
    X

    வட மாநில வாலிபர் மர்ம சாவு

    • துறையூர் அருகே கோழிப்பண்ணையில் வேலை செய்த வட மாநில வாலிபர் மர்ம சாவு
    • வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் தியாகி சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் மதன் (45). இவர் விசாலாட்சி அம்மாள் சமுத்திரம் கிராமத்தில் சொந்தமாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் ஒரிசா மாநிலத்தை ஹேமராஜ் தருவா (43) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்து தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் பணியாளர்கள், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் அங்கு சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஹேமராஜ் தருவாவை பரிசோதித்துவிட்டு ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதை அறிந்த துறையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று, பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் ஹேமராஜ் தருவா வலிப்பு நோயின் காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துறையூர் அருகே கோழி பண்ணையில் பணிபுரிந்த வட மாநில இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×