என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதிய டாஸ்மாக் மதுபானகடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
- குடிமக்களால் தொல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
- முசிறி கோட்டாட்சியரிடம் மனு
முசிறி,
முசிறி சேலம் பைபாஸ் ரோட்டில் ஏற்கனவே இரண்டு மது கடைகள் இருப்பதினால் அடிக்கடி பொதுமக்கள் பிரச்சனைகளும் விபத்து களும் ஏற்படுகிறது.மேலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மற்றும் ஊராட்சி அலுவலகத்திற்கு செல்லும் அரசு அலுவலர்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இந்த வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மளிகை கடை, ஜவுளி கடை, ஸ்டேஷனரி கடை, பெட்ரோல் பங்கு, மசூதி போன்ற தேவைகளுக்காக சொல்லுகின்ற பொழுது பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.இந்நிலையில் மூன்றாவ தாக தா.பேட்டை ரோடு ரவுண்டானா கிழக்கு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் மதுபான கடை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்க இருப்பதை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும், மதுக்கடைகள் தேவையில்லை என அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் கோட்டாட்டாச்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு மனு மீது பரிசீலனை செய்து, மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியர் மாதவன் உறுதி அளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்