என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் - சரண கோஷம் முழங்க அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்
    X

    திருச்சியில் - சரண கோஷம் முழங்க அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்

    • கார்த்திகை முதல்நாளில், சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளத் தொடங்கினார்கள் ஏராளமான பக்தர்கள்.
    • கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.

    திருச்சி

    கார்த்திகை முதல்நாளில், சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளத் தொடங்கினார்கள் ஏராளமான பக்தர்கள்.

    கார்த்திகை மாதம் முதல் தேதி வந்துவிட்டாலே, அற்புதமான கார்த்திகை மாதம் பிறந்துவிட்டாலே, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் விரதம் மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். கார்த்திகைப் பிறப்பில் விரதம் மேற்கொண்டு, தை மகர ஜோதியில் தரிசிக்கும் பக்தர்களும் உண்டு. ஒரு சிலர், கார்த்திகை மாதத்தில் விரதம் மேற்கொண்டு, மார்கழி தொடங்குகிற தருணத்தில், மார்கழிக்கு முன்னதாக என்றெல்லாம் அய்யப்ப சுவாமியைத் தரிசிக்கக் கிளம்புவார்கள்.

    அய்யப்ப சுவாமிக்கு விரதம் மேற்கொள்பவர்கள், குருசாமி துணையுடன் மலைக்கு இருமுடி அணிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கார்த்திகை தொடங்கியது முதலே கடும் விரதம் மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள் பக்தர்கள்.

    கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.

    அதில் முக்கியமாக மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று அய்யப்பனுக்கு மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். அப்போது இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

    அதேபோல இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று (16-ம் தேதி) திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.

    இதையொட்டி திருச்சி முதலான பல ஊர்களிலும், காலையிலேயே கோவில்களில் பக்தர்கள் குவியத் தொடங்கினார்கள்.

    இதையொட்டி, திருச்சி கண்டோன்மெண்ட் அய்யப்பன் கோவில், மலைக்கோட்டை, சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பட ஏராளமான கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் வந்து சரண கோஷங்கள் முழங்க மாலையணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

    மேலும், கரூர், பெரம்பலூர்,அரியலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவில் மற்றும் பல கோயில்களிலும் மாலையணிந்து கொண்டு விரதத்தைத் பக்தர்கள் தொடங்கினார்கள்.

    தமிழகத்தில் பல மாவட்டங்களில், சமீபத்தில் மழை வெளுத்து வாங்கியதால், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை கார்த்திகை முதல் நாளில் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழையை பொருட்படுத்தாமல், காலையிலேயே விரதம் இருக்கத் தொடங்கி விட்டார்கள் அய்யப்ப பக்தர்கள்.

    Next Story
    ×