என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராமஜெயம் கொலை வழக்கில், துப்பு துலங்கியதா?
- உண்மை கண்டறியும் சோதனையில் துப்பு துலங்கியதா?
- சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி. விளக்கம்
திருச்சி,
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் அதி–காலையில் நடைபயற்சி சென்றபோது மர்ம நபர்க–ளால் கடத்தி கொலை செய் யப்பட்டார்.இந்த கொலை வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி–னர். பின்னர் பின்னர் சி.பி.ஐ. மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.ஆனால் எந்த துப்பும் துலங்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப் பட்டு விசாரணை நடந்து வருகிறது. கொலைக்கு பயன்படுத்திய காரினை அடிப்படையாகக் கொண்டு கார் டிரைவர்களிடம் விசா–ரணை நடத்தப்பட்டது.
பின்னர் ராமஜெயம் கொலை வழக்கில், தொடர் புடையதாக கருதப்படும் சாமி ரவி, திலீப், சிவா, சத்யராஜ் ராஜ்குமார், தென்கோவன் உள்ளிட்ட 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை கடந்த மாதம் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்டது.இந்த நிலையில் ராமஜெ–யம் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக உண்மை கண்டறியும் சோதனையில் 11 ரவுடிகள் தங்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியதாகவும், திலீப் என்ற ரவுடி மட்டும் உண்மையை கூறியதாகவும் தகவல் வெளியாகியது.இதுகுறித்து சிறப்பு புல–னாய்வுக்குழு எஸ்.பி. ஜெயக்குமார் கூறியதா–வது:-உண்மை கண்டறியும் சோதனை நடத்தி முடிக் கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த சோதனை அறிக்கை எங்களுக்கு வந்து சேரவில்லை. அந்த அறிக்கை வந்தால் தான் எதுவும் சொல்ல முடியும். யூகங்களுக்கு பதில் அளிக்க இயலாது என்றார்.