என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமுக்கடித்து நூதன போராட்டம்
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சேதம டைந்த கிழக்கு வாசல் கோபுரத்தை சரிசெய்யும் பணி கடந்த 6 மாத காலமாக நிறைவடையவில்லை.
- கோவில் நிர்வாகத்தை கண்டித்து, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் தமுக்கடித்து நூதன போராட்டத்தில் ஈடுப ட்டனர்.
திருச்சி
இந்து சமய அறநி லைத்துறை நிதி ஒதுக்கீடு செய்த பின்னரும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சேதம டைந்த கிழக்கு வாசல் கோபுரத்தை சரிசெய்யும் பணி கடந்த 6 மாத காலமாக நிறைவடையவில்லை.
அதனால் பள்ளி குழந்தை கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த பாதை யை பயன்படுத்த மு டியாத வகையில் பாதிக்க ப்பட்டுள்ளனர். அதேபோல கோவி லுக்கு பல இடங்க ளில் நிறைய சொத்துக்கள் இருக்கும் நிலையில் தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் பெருமாளை தரிசிக்க வந்து செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு, வாகனங்களை நிறுத்து வதற்கு உரிய இடத்தை கோவில் நிர்வாகம் இதுவ ரை ஒதுக்கவில்லை.
இது போன்ற குறைகளை சரி செய்யாத கோவில் நிர்வாகத்தை கண்டித்து, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் தமுக்கடித்து நூதன போராட்டத்தில் ஈடுப ட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பகுதி செயலாளர் சந்துரு தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் லெனின், மாவட்ட செய லாளர் சேதுபதி ,மாவட்ட பொருளாளர் நவநீத கிருஷ்ணன், பகுதி தலைவர் லோகநாதன், பகுதி துணைத்தலைவர் ஜெயக்கு மார் ,பகுதி பொருளாளர் ரங்கராஜ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






