search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது
    X

    மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது

    • வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவிக்கு கொடுமை
    • போலீசா ர்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    முசிறி அருகே உள்ள டி. புதுப்பட்டி வெங்கடாசலபுரம் அம்பலக்காரன் தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 35). இவருக்கும் ஜெயந்தி (34) என்பவருக்கும் கடந்த 29- 10 -2020 அன்று பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. பின்னர் சில மாதங்கள் கணவன்- மனைவி இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் வெங்கடாசலத்திற்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரது சுயரூபம் மாறியது. மனைவியை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.சிறிது காலம் கொடுமைகளை தாங்கிக் கொண்டு ஜெயந்தி கணவருடன் வசித்து வந்தார்.இருந்த போதிலும் அவரது டார்ச்சர் தொடர்ந்ததால் கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டுக்கு ஜெயந்தி சென்றார்.பின்னர் அவரது பெற்றோர் அறிவுரை கூறி மகளை மீண்டும் கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் கணவர் மற்றும் மாமியார் ஜெயந்தியை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.வீட்டுக்கு வந்து அவரை மாமியார் செல்லம்மாள் அடித்து துரத்தியதாக கூறப்படுகிறது.இதனால் பாதிக்கப்பட்ட ஜெயந்தி இது குறித்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கணவர் வெங்கடாசலம் மாமியார் செல்லம்மாள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வெங்கடாசலத்தை கைது செய்தனர்.

    Next Story
    ×