search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் மனித சங்கிலிப் போராட்டம்
    X

    திருச்சியில் மனித சங்கிலிப் போராட்டம்

    • திருச்சியில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது
    • அனைத்துக் கட்சிகள் சார்பில் நடந்தது

    திருச்சி.

    அமைதியை பாதுகாப்போம், மதவாத சக்திகளை முறியடிப்போம் என்பதை வலியுறுத்தி, திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் சமூக மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தி.க. உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தலைமை தாங்கினார். மனிதசங்கிலி போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.பாலபாரதி, மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, கவுன்சிலா சுரேஷ்குமார், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜவஹர், சிறுபான்மை பிரிவு பெஞ்சமின் இளங்கோ. கவுன்சிலர்கள் ரெக்ஸ், சுஜாதா, மதிமுக.டி.டி.சி சேரன், மகளிர் அணி ரொகையா,பெல் ராஜமாணிக்கம், கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார், ஆடிட்டர் வினோத், ஆசிரியர் முருகன், விடுதலைசிறுத்தைகள் கட்சி பிரபாகரன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள் கவுன்சிலர் பைஸ் அகமது, முகமது ராஜா, பல்வேறு கட்சியை சேர்ந்த சிவாஜி சண்முகம், ரவி, கிருஷ்ணன்,ஹெலன், அருள், அரசு, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×