என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் மோசடி
    X

    பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் மோசடி

    • திருச்சி பெட்டவாய்த்தலை பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை மெயின்ரோடு வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி முத்தாத்தாள்(வயது 67). இவர் அங்குள்ள பாலன்காவேரி பரிசல்துறை ரோட்டை சேர்ந்த முருகானந்தம் (40) என்பவரிடம் ரூ.16 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வீடு விலை பேசினார்.

    அதற்கு முதல் தவணையாக ரூ.6.50 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்ற முருகானந்தம் சொன்னபடி வீட்டை கிரயம் செய்து கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இதுபற்றி முத்தாத்தாள் பெட்டவாய்தலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் பழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×