என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு
- கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு
- அப்போது மனைவியை பார்த்து ஆத்திரமடைந்து தாக்கியதாக கூறப்படுகிறது
திருச்சி
புதுக்கோட்டை விராலிமலை குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவரது மனைவி சுசீலா (34). இந்த தம்பதியருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 7 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து மகன்களுடன் சுசீலா அன்பு நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். மேலும் விவாகரத்து கேட்டு திருச்சி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக கணவன் மனைவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தனர். அப்போது மனைவியை பார்த்து ஆத்திரமடைந்த சரவணன் அவரை கெட்ட வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






