என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு
- 2-வது திருமணம் செய்ததை தட்டி கேட்டதால் முதல் மனைவியை தாக்கிய கணவர்
- கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடைபெறும் நிலையில்தொ ட்டியம் அருகே சம்பவம்
முசிறி,
தொட்டியம் அருகே உள்ள மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 37)இவருக்கும் பெட்டவாய்த்தலை பழைய தபால் நிலைய பகுதியைச் சேர்ந்த சிவகாமி (34) என்பவருக்கும் கடந்த 2016 ல் திருமணம் நடந்தது. அப்போது நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதனிடையே மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு சிவகாமியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வீட்டில் இருந்து துரத்தினர். அதைத்தொடர்ந்து இருவருக்கும் விவாகரத்து வழக்கு முசிறி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரவிக்குமார் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதை மறைத்து தன பிரியா (31) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இது பற்றி அறிந்த முதல் மனைவி சிவகாமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கணவரின் வீட்டுக்கு நியாயம் கேட்க சென்றார். அப்போது ரவிக்குமார் அவரது இரண்டாவது மனைவி தன பிரியா, தாய் விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் ராஜா என்கிற ராஜசேகர், மகாலட்சுமி, சுந்தரி, சுப்பிரமணியன், அலமேலு மங்கை ஆகிய 8 பேரும் சேர்ந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிவகாமி மீண்டும் தொட்டியம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் அளித்தார். அதன் பேரில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ரவிக்குமார் உள்ளிட்ட 8 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்