search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் மீது லஞ்சப்புகார்
    X

    போலீஸ் மீது லஞ்சப்புகார்

    • போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க புகார் கொடுத்த கில்லாடி பெண்
    • டி.ஜி.பி. தகவலுக்கு பின் விடுவிக்கப்பட்டனர்

    திருச்சி,

    திருச்சி செசன்ஸ் கோர்ட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே நாள் இரவில் 3 பூட்டிய வீடுகளில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளையில் ராஜஸ்தான் மாநில கும்பலைச் சேர்ந்த சங்கர், ரத்தன் ஆகிய இரு–வரையும் திருச்சி மாநகர தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 50 பவுன் நகை கைப்பற்றப்பட்டது. மேலும் கொள்ளை அடித்த 250 பவுன் நகை–களை, ராஜஸ்தான் மாநி–லம் அஜ்மீரில் உள்ள பன்னாலால், சானியா தம்பதி–யரிடம் கொடுத்து வைத்திருப்பதாக கைதான இருவரும் வாக்குமூலம் அளித்தனர்.அதைத்தொடர்ந்து திருச்சி கண்டோன்மெண்ட் உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி, உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் உமா சங்கரி மற்றும் 10 போலீசார் அடங்கிய தனிப்படையினர் இரு தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் அஜ் மீர் புறப்பட்டு சென்ற–னர். பின்னர் அந்த தம்பதியை கைது செய்ய திட்டமிட்டனர். அப்போது பண்ணா லால் தப்பி ஓடி விட்டார். அவரது மனைவி சானியா திருச்சி போலீஸ் பிடியில் சிக்கினார்.அவரிடம் கொள்ளை–யர்கள் சங்கர், ரத்தன் கொடுத்த திருட்டு நகைகள் குறித்து விசாரணை செய்த போது நகைகளை உருக்கி விற்று விட்டதாக கூறியுள்ளார். மேலும் அதற்கு பதிலாக பணமாக தருகிறோம் என்று கூறியுள் ளனர். இதனை நம்பிய போலீசார் பணத்தை வாங் கிக்கொண்டு புறப்படுவ–தற்காக காத்திருந்தனர்.ஆனால் சானியாவோ தன்னை கைது செய்யாமல் இருக்க தமிழக போலீசார் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட் பதாக அஜ்மீர் போலீ–சில் புகார் அளித்தார். உடனே புகாரின் பேரில் ராஜஸ் தான் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் திருச்சி தனிப்படை போலீ–சாரை விசாரணை வளை–யத்துக்குள் கொண்டு வந்தனர். சுமார் 12 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீ–சாரின் விசாரணை வளையத்துக்குள் இருந்து இவர்கள் சிக்கி தவித்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா, உடனடியாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் ராஜஸ்தான் போலீசாரிடம் தொடர்பு கொண்டு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை அனுப்பி வைத்தார்.அதன் பேரில் திருச்சி தனிப்படை போலீ–சார் ராஜஸ்தான் போலீ–சார் பிடியிலிருந்து விடுவிக்கப் பட்டனர். கைதான கொள் ளையர்கள் இருவரும் ெரயில் நிலையங்களில் தங்கியிருந்து பெட்ஷீட் விற்பது போன்று தெருக்களில் வந்து பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×