search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அழுகிய நிலையில் கூலி தொழிலாளி பிணம்
    X

    அழுகிய நிலையில் கூலி தொழிலாளி பிணம்

    • வீட்டில் அழுகிய நிலையில் கூலி தொழிலாளி பிணம்
    • தூங்க சென்றவரின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு

    திருச்சி,

    திருச்சி வடக்கு தாராநல்லூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் மூக்க பிள்ளை. இவரது மகன் வரதராஜ் (வயது 35) இவர் திருமணமாகாதவர். கூலி தொழிலாளி. மதுவுக்கு அடிமையானவர். வீட்டில் வரதராஜன் முதல் தளத்தில் வசித்து வந்தார். கீழே அவரது தாயார் அம்சவல்லி மற்றும் சகோதரி கோமதி அவரது கணவர் சரவணன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டின் அறையில் தூங்கிய வரதராஜ் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை.இந்த நிலையில் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த தாய் அம்சவல்லி முதல் தளத்தில் உள்ள வரதராஜ் அறைக்கு சென்றுபார்த்த பொழுது அவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்சவல்லி உடனடியாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இதை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காந்தி மார்க்கெட் போலீசார் வரதராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜ் இறந்தது எப்படி? என்ன காரணம்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் காந்தி மார்க்கெட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    Next Story
    ×