search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துவரங்குறிச்சி அருகே குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியில் வந்தவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு
    X

    துவரங்குறிச்சி அருகே குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியில் வந்தவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு

    • துவரங்குறிச்சி அருகே குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியில் வந்தவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது
    • ஊராட்சி தலைவரை தாக்க முயன்றதாக அளித்த புகாரில் நடவடிக்கை

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், துவ–ரங்குறிச்சியை அடுத்த கஞ்ச–நாயக்கன்பட்டி ஊராட்சி–யில் செட்டியபட்டி பஞ்சா–யத்து உள்ளது. இந்த ஊரின் மையப்பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதில் நீர் ஏற்றப்பட்டு அதன் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடிநீர் தொட்டியில் விஷம் கலக் கப்பட்டுள்ளாதாக வந்த தகவலால் கிராமமே பரப–ரப்புக்கு உள்ளானது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வருவாய் துறையினர், சுகா–தாரதுறை அதிகாரிகள் செட்டியபட்டிக்கு விரைந்து சென்றனர்.மேலும் சம்மந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த குடிநீர் மற்றும் அந்த பகுதியில் குடிநீருக்காக பயன் ப–டுத்தப்பட்டுவரும் சில சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி–களில் இருந்த நீர் சேக–ரிக்கப்பட்டு ஆய் வ–கத்திற்கு அனுப்பி வைக் கப்பட்டது. அத்துடன் குடிநீர் தொட்டிகளில் இருந்த நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. தற்காலிகமாக மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஊராட்சி நிர்வா–கத்தின் சார்பில் மாற்று ஏற் பாடும் செய்யப்பட்டது.இதற்கிடையே பணப் பிரச்சினையில் செட்டிய–பட்டியை சேர்ந்த சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமரா–வதி அருகே உள்ள மதி–யாணி என்ற பகுதியை சேர்ந்த பச்சமுத்து (வயது 43) மற்றும் செட்டியபட்டியை சேர்ந்த வெள்ளையம்மாள் ஆகிய இருவர் மீதும் துவ–ரங்குறிச்சி போலீசார் கொலை உள்ளிட்ட பல் வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.இந்நிலையில் இருவர் மீதும் கடந்த ஆண்டு குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அதன் பிறகு சிறையில் இருந்து வெளியில் வந்த பச்சமுத்து ஊரின் குடி–நீர் தொட்டியில் விஷம் கலந்து கொலை செய்வதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே தான் சம்பவதன்று பச்சமுத்து குடிநீர் தொட்டியின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது கஞ்சநாயக்கன் ட்டி ஊராட்சி தலைவர் பழனிசாமி (64) என்பவர் குடிநீர் தொட்டி அருகே தேவையின்றி நின்று கொண்டிருந்தது தொடர் பாக கேட்டுள்ளார். அதற்கு ஊராட்சி தலைவரை தகாத வார்த்தைகளால் திட்டி பச்சமுத்து தாக்க முயற்சி செய்துள்ளார்.இது தொடர்பாக ஊராட்சி தலைவர் பழனி–சாமி அளித்த புகாரின் பேரில் பச்சமுத்து மீது கொலை முயற்சி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்ப–வத்தில் பச்சமுத்து ஏற்க–னவே விஷம் கலப்பதாக சொல்லி இருந்ததால் சந்தே–கத்தின் பேரில் குடிநீர் ஆய் வுக்கு அனுப்பட்டது குறிப்பிடத் தக்கது.

    Next Story
    ×