search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
    X

    3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

    • திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • 3 பயணிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது

    கே.கே.நகர்,

    மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு, ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணிகள்3 பேரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் மலேசியாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இந்த நிலையில் அவர்களை சோதனை செய்தபோது அந்த 3 பயணிகளும் தனது உடலில் மறைத்து, பேஸ்ட் வடிவிலான தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. ரூ.1.85 கோடி மதிப்பிலான 3.01 கிலோ கடத்தல் தங்கத்தை அவர்களிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை கடத்தி வந்த 3 பயணிகளையும் கைது செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×