என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுவுக்கு அடிமையான 2 பேர் சாவு
திருச்சி
திருச்சி உறையூர் நடு வைக்கோல் கார தெரு பகுதியை சேர்ந்தவர் கரிகாலன் வயது 40 இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.இந்த நிலையில் நேற்று முன் தினம் கரிகாலன் புத்தூர் ஹை ரோடு சர்ச் கார் ஸ்டாண்ட் பகுதியில் மயங்கி விழுந்தார்.இது பற்றி தகவல் அறிந்த அவரது சகோதரி காந்திமதி கரிகாலனை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கரிகாலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதேபோன்று திருச்சி புத்தூர் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (52).பெயிண்டர் ஆன இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.இதனால் அவரது உடல் நலமும் பாதிக்கப்பட்டது இந்த நிலையில் கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது மனைவி செல்வி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார் என்ற நிலையில் நேற்று பாஸ்கரன் புத்தூர் ஹை ரோடு டி வி ஆர் அப்பார்ட்மெண்ட் பகுதியில் மயங்கி கிடந்தார் அவரது சகோதரர் இளையராஜா அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினர் குடிப்பழக்கத்திற்கு ஆளான ரெண்டு பேர் உறையூர் பகுதியில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்