search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க கூட்டம்
    X

    தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்திய சங்க நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

    தஞ்சையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க கூட்டம்

    • 25 சதவீத போனஸ் வழங்கி தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • வருகிற 10-ந் தேதி தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கத்தின் மத்திய சங்க நிர்வாக குழு கூட்டம் சங்கத் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார்.

    சம்மேளன துணைத் தலைவர் துரை. மதிவாணன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் அரசு உடனடியாக அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி போனஸ் பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும்.

    அனைவருக்கும் 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும், தீபாவளி முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், போனஸ் சட்டத்தின் படி 30 நாட்கள் பணிபுரிந்த அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும் ,

    கடந்த கால போனஸ் நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட தலைவர் சேவையா, நுகர்பொருள் வாணிப கழக சங்க மாநில பொருளாளர் கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் அப்பாத்துரை, போக்குவரத்து சங்க நிர்வாகிகள் கஸ்தூரி, மாணிக்கம், சுந்தர பாண்டியன், சந்திரன், ரங்கதுரை, செல்வராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பொருளாளர் ராஜமன்னன் நன்றி கூறினார்.

    Next Story
    ×