search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில்  போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஓய்வூதியர்களை படத்தில் காணலாம். 

    நெல்லையில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

    • அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல அலுவலகம் முன்பு இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல அலுவலகம் முன்பு இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார். எச்.எம்.எஸ். மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம், ஏ.ஐ.டி.யு.சி. நெல்லை பொதுச் செயலாளர் உலகநாதன், டி.டி.எஸ். மாநில துணைத்தலைவர் சந்தானம், ஐ.என்.டி.யு.சி. பொதுச் செயலாளர் மகாராஜன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறும்போது அனைத்து பண பலன்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து ஊழியர்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி இறுதிப்படுத்த வேண்டும். சேவை துறையாக செயல்படும் போக்குவரத்து கழகங்களின், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×