என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருநங்கைகள் குறைதீர்ப்பு முகாம் ஊட்டியில் 11-ந்தேதி நடக்கிறது
திருநங்கைகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கூறப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டு உள்ள அறிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்ய ஏதுவாக, மாதந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.
அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி சமூக நல அலுவலகத்தில் வருகிற 11-ந் தேதி திருநங்கைகள் குறைதீர்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் திருநங்கைகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கூறப்பட்டு உள்ளது.
Next Story






