கூடங்குளம் அருகே அணுமின்நிலைய மேற்பார்வையாளரை தாக்கி நகை பறித்த திருநங்கை கைது

நான்கு சாலையில் நின்று கொண்டிருந்த திருநங்கைகள் துரையை வழிமறித்துள்ளனர். புகாரின் பேரில் சாக்‌ஷி என்ற திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம் அருகே அணுமின்நிலைய மேற்பார்வையாளரை தாக்கி நகை பறித்த திருநங்கை கைது
Published on

பணகுடி:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலை பாதுகாப்பு மேற்பார்வையாளராக துரை (வயது 49) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் செட்டிகுளம் அணு விஜய் நகரியத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் செட்டிகுளத்தில் இருந்து வள்ளியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காவல்கிணறு சந்திப்புக்கும், பணகுடிக்கும் இடையே நான்கு சாலையில் நின்று கொண்டிருந்த திருநங்கைகள் வழிமறித்துள்ளனர்.

அப்போது துரையிடமிருந்து 2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை திருநங்கைகள் பறித்து சென்றனர். இதுகுறித்து பணகுடி போலீஸ் நிலையத்தில் துரை அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழக்குப்பதிவு செய்து சாக்ஷி என்ற திருநங்கையை போலீசார் கைது செய்தனர். மேலும் காவியா, ஷைனிகா, சுபேணா ஆகிய 3 திருநங்கைகளை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com