search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் 9 பேர் இடமாற்றம்- கூடுதல் கலெக்டர் உத்தரவு
    X

    முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் 9 பேர் இடமாற்றம்- கூடுதல் கலெக்டர் உத்தரவு

    • இதேபோல் வருவாய் அலகில் பணியாற்றிய இளநிலை வருவாய் ஆய்வா ளர்கள், தட்டச்சர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் 25 பேருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பதிவு உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
    • தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் பணிபுரிந்த செல்வகுமார், தஞ்சை தனி தாசில்தார் அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    அதன் பற்றிய விவரம் வருமாறு:-

    திருவிடைமருதூர் தாலுகா அலுவலகமுதுநிலை வருவாய் ஆய்வாளர் பரிமளா, கும்பகோணம் தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) அலுவலகத்துக்கும், தஞ்சை தனி துணை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த சரவணன் கும்பகோணம் தனி தாசில்தார் (ஆதிதிரா விடர் நலத்துறை) அலுவல கத்துக்கும், தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் பணிபுரிந்த செல்வகுமார், தஞ்சை தனி தாசில்தார் அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.

    தஞ்சை தனி தாசில்தார் அலுவலகத்தில் பணி யாற்றிய சத்யராஜ், பாபநாசம் தாலுகா அலுவலகத்துக்கும், பூதலூர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த மதியழகன் தஞ்சை தாலுகா அலுவலகத்துக்கும், இங்கு பணியாற்றிய கலை யரசி தஞ்சை மாவட்ட வழங்கள் மற்றும் நுக ர்வோர் பாதுகாப்பு அலுவல கத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இங்கு பணியாற்றிய ஜெபராஜ் பூதலூர் தனித்துறை தாசில்தார் (குடிமை பொருள் வழங்கல் ) அலுவலகத்துக்கும், ஒரத்தநாடு தாலுகா அலுவலகத்தில் பணியா ற்றிய நரேந்திரன் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கும், திருவையாறு தாலுகா அலுவலகத்தில் பணியா ற்றிய சுமதி பாபநாசம் தாலுகா அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.

    இதேபோல் வருவாய் அலுவலகில் பணியாற்றிய இளநிலை வருவாய் ஆய்வா ளர்கள், தட்டச்சர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் 25 பேருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பதிவு உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி வருவாய் அலகில் தட்டச்சர்களாக பணியாற்றிய சீதளா தேவி, சக்தி தேவி, கௌதமன், பிரகாஷ், முத்துக்குமார், மகேஸ்வரி, ஜெயந்திரன், தில்சாத், சத்தியா ஆகியோருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் இளநிலை வருவாய் ஆய்வாளர் ரகுராமன், சுஜிதா, கவிதா, சுதா, கவிதா, மனோகரன், இளவரசன், தமிழ்வாணன் ஆகியோருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்ப ட்டுள்ளது.

    இதேபோல் கிராம நிர்வாக அலுவலர்கள் பாரதிதாசன் (திப்பன் விடுதி), ரத்தினவேல் (காலகம்), சக்திவேல் (குருவி க்கரம்பை), ஜெயசீலன் (பழமார்னேரி), ரமேஷ் (செல்லப்பன் பேட்டை), அர்ச்சனா (கண்டியூர்), சங்கீதா (வீரியங்கோட்டை), அசாருதீன் (கொரநாட்டு கருப்பூர்) ஆகியிருக்கும் முதுநிலை வருவாய் ஆய்வா ளர்களாக பதிவு உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×