என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி தோட்டக்கலை சார்பில் சிறுதானியங்கள் சாகுபடி பயிற்சி
    X

    கோத்தகிரி தோட்டக்கலை சார்பில் சிறுதானியங்கள் சாகுபடி பயிற்சி

    • அங்கக முறையில் காபி சாகுபடி மற்றும் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்த செயல்முறை விளக்கம்
    • கடினமாலா, அரக்கோடு பகுதியை சேர்ந்த 50 விவசாயிகள் கலந்துகொண்டனர்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆகியவை சார்பில் ஆத்மா திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு மாநிலஅளவிலான சிறுதானிய பயிர்களின் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி நடைபெற்றது. இதில் கடினமாலா, அரக்கோடு பகுதியை சேர்ந்த 50 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்களுக்கு சிறுதானிய பயிர்களான தினை, சாமை, கேழ்வரகு அங்ககமுறை சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் தினை, சாமை மதிப்பு கூட்டுதல், அங்கக முறையில் காபி சாகுபடி மற்றும் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்த செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

    Next Story
    ×